செம்மையர் நஞ்சுண்டன்

  ‘எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்’ என்னும்  தலைப்பில் ஷோபாசக்தி தம் முகநூலில் பதிவு எழுதியிருக்கிறார். எடிட்டிங் தொடர்பான அவர் கருத்துக்கள் அனைத்தும் எனக்கும் உடன்பானவை. அப்பதிவு எனக்குச் சில நினைவுகளைத் தூண்டியது. அதில் எடிட்டிங் என்பதற்கு நிகரான சொல் பற்றி அவர்…

0 Comments

அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி

  இன்று (அக்டோபர் 15) எனது அறுபதாம் பிறந்த நாள். ஒருவர் அறுபது வயது வரை வாழ்வதைப் பெருஞ்சாதனையாகக் கருதும் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இருந்தது. மருத்துவ வளர்ச்சி, நவீன மயமாக்கல் மூலமாக இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக நம் மக்கள்…

4 Comments

நாமக்கல்  ‘விஜய’ம்  

  27-09-2025 சனி அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலில் வந்து பேசிய ஊர் நாமக்கல். கரூர் துயரச் சம்பவம் காரணமாக நாமக்கல் கூட்டச் செய்திகள் பெரிதாக வரவில்லை; வந்தவையும் கவனம் பெறவில்லை. நாமக்கல்லில் வசிப்பவன் என்னும் அடிப்படையில்…

2 Comments

அருட்பெருவெளியில் ரமேஷ் பிரேதன்

  எழுத்தாளர் ரமேஷ் பிரேதனைத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்ததில்லை.  1990களில் ரமேஷ் - பிரேம் இருவரும் இணைந்து எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். எழுத்திலும் சொந்த வாழ்விலும் பெரும்கலகக்காரராகத் தோன்றினார். அவர்…

0 Comments

நாமக்கல் மாநகராட்சியின் பேரவலம் 1

  நகராட்சியாக இருந்த நாமக்கல் இவ்வாண்டு மாநகராட்சி ஆயிற்று. அதற்காகப் பல ஊராட்சிகளை நகரத்துடன் இணைத்தனர். அதனால் சொத்து வரி உயர்வு, ஊராட்சிகளில் வசித்தவர்களுக்கு நூறுநாள் வேலைத்திட்ட வாய்ப்பின்மை என எதிர்மறை விளைவுகள் பல. சில நல்ல விஷயங்களாவது நடக்கும் என்றிருந்தோம்.…

1 Comment

எந்த முத்துராமலிங்கத் தேவர்?

சென்னை, தரமணியில் உள்ள அறிவுலகச் செல்வமான ‘ரோஜா முத்தையா நினைவு ஆராய்ச்சி நூலகம்’ பற்றியும் அங்கே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் குறித்தும் ‘ஆயிரங்காலத்துப் பரண்’ என்னும் தலைப்பில் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர் வெளியாகிறது. வெகுஜன இதழில் இத்தகைய தொடர் வருவது…

2 Comments

புதுமைப்பித்தன் போட்ட ‘ம்’

புதுமைப்பித்தன் நினைவு நாள் இன்று (ஜூன் 30). ஆ.இரா.வேங்கடாசலபதியின் பேருழைப்பில்  ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ உருவாகியிருக்கிறது. புதுமைப்பித்தன் கதைகள், புதுமைப்பித்தன் கட்டுரைகள், புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் ஆகிய முப்பெருந்தொகுதிகளை அடுத்து நான்காவதாக இக்களஞ்சியம் வெளியாகிறது. புதுமைப்பித்தனின் சமகாலத்தவர் எழுதிய மதிப்புரைகள், கட்டுரைகள், இரங்கல் உரைகள்…

1 Comment