தனியார் நிறுவனத்திலும் இந்தி
பொதிகைத் தொலைக்காட்சி (DD தமிழ் என்று ‘தமிழ்’ சேர்த்தது சாதனையாம். ‘பொதிகை’ தமிழ் இல்லையோ?) சார்பில் நடைபெற்ற இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். அந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியை விட்டுவிட்டுப் பாடியது தொடர்பான சர்ச்சை பெரிதாகி உள்ளது. அவ்வடியைப் பாடியோர் மறந்துவிட்டுப் பாடியிருக்கலாம்; ஆளுநருக்குப் பிடிக்கும் என்று நினைத்து வேண்டுமென்றே விட்டுமிருக்கலாம். எப்படியோ இப்போது பலகோணப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.