விஸ்வரூப  தரிசனம்

  பேசவும் பழகவும் மிகவும் சுவாரசியமான மனிதர் ஆசி கந்தராஜா. 'கள்ளக்கணக்கு' என்னும் அவருடைய சிறுகதை நூலை 2018இல் வெளியிட்டுப் பேசி இருக்கிறேன். அவர் எழுதிய சுவையான அனுபவக் கட்டுரைகளைக் கொண்ட நூல் 'மண் அளக்கும் சொல்.'   அதற்கு மதிப்புரை எழுதியுள்ளேன்.…

0 Comments

மூன்று நூல்கள்

  1 பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய ‘பட்டறை’ நாவல் வெளியீட்டு நிகழ்வு இன்று (08-01-26) நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கிறேன். அந்நாவலுக்கு நான் எழுதிய பிற்குறிப்பு இது: சிறுதொழிற்கூடம் ஒன்றைக் களமாகக் கொண்ட நாவல் 'பட்டறை.' சில இயந்திரங்களினூடே இயங்கும் விரல் விட்டு…

0 Comments

செம்மையர் நஞ்சுண்டன்

  ‘எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்’ என்னும்  தலைப்பில் ஷோபாசக்தி தம் முகநூலில் பதிவு எழுதியிருக்கிறார். எடிட்டிங் தொடர்பான அவர் கருத்துக்கள் அனைத்தும் எனக்கும் உடன்பானவை. அப்பதிவு எனக்குச் சில நினைவுகளைத் தூண்டியது. அதில் எடிட்டிங் என்பதற்கு நிகரான சொல் பற்றி அவர்…

0 Comments

அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி

  இன்று (அக்டோபர் 15) எனது அறுபதாம் பிறந்த நாள். ஒருவர் அறுபது வயது வரை வாழ்வதைப் பெருஞ்சாதனையாகக் கருதும் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இருந்தது. மருத்துவ வளர்ச்சி, நவீன மயமாக்கல் மூலமாக இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக நம் மக்கள்…

4 Comments

அருட்பெருவெளியில் ரமேஷ் பிரேதன்

  எழுத்தாளர் ரமேஷ் பிரேதனைத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்ததில்லை.  1990களில் ரமேஷ் - பிரேம் இருவரும் இணைந்து எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். எழுத்திலும் சொந்த வாழ்விலும் பெரும்கலகக்காரராகத் தோன்றினார். அவர்…

0 Comments

ஒரு சிறுகதை; ஒரு மரபுத்தொடர்

தற்போது இணைய இலக்கிய இதழ்கள் பல வருகின்றன. அவற்றில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை. 2000க்குப் பிறகு சில ஆண்டுகள் சிறுகதை எழுத்தாளர்கள் குறைந்திருந்தனர். வெளியீட்டு வாய்ப்புகள் இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம். இணைய இதழ்களின் எண்ணிக்கையும் பக்க வரையறை பற்றிய…

2 Comments

புதுமைப்பித்தன் : ‘சங்க இலக்கியம் புகைப்படக் கவிதை’

பழந்தமிழ் நூல்களில் தனிப்பாடல்கள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் முதலியவற்றில் புதுமைப்பித்தனுக்கு மிகுந்த ஆர்வமும் வாசிப்பும் இருந்துள்ளன. பழந்தமிழ்ப் பாடல்களை நயப்பார்வையில் சுவைக்கும் வகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒருபாடலை எடுத்துக்கொண்டு அதில் உள்ள நயங்களை எல்லாம் விளக்கிக் கட்டுரை எழுதும் வகைமையை உருவாக்கியவர் அல்லது…

1 Comment