புனைவில் இசைக்கப்படும் விடுதலை – ஜார்ஜ் ஜோசப்

(ஜூன் 2025 காலச்சுவடு இதழில் என் சிறுகதைகள் குறித்து ஜார்ஜ் ஜோசப் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. முழுமையாகக் கதைகளை வாசித்து தம் அவதானிப்புகளை விரிவாக இக்கட்டுரையில் முன்வைத்துள்ளார். வாசிப்புச் சுவை மிக்க விமர்சனக் கட்டுரை. அதன் ஒரு பத்தியை மட்டும் இதில்…

0 Comments

தமிழில் இருந்து பிறந்ததா கன்னடம்?

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில்  நடிகர் கமலஹாசன் ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அதற்காகக் கர்நாடக அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓர் அமைப்பு அவர் முகத்தில் கரி பூச முயன்றதாகக் கூறியுள்ளது. மன்னிப்பு கேட்கவில்லை…

1 Comment

புதுமைப்பித்தன் : ‘சங்க இலக்கியம் புகைப்படக் கவிதை’

பழந்தமிழ் நூல்களில் தனிப்பாடல்கள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் முதலியவற்றில் புதுமைப்பித்தனுக்கு மிகுந்த ஆர்வமும் வாசிப்பும் இருந்துள்ளன. பழந்தமிழ்ப் பாடல்களை நயப்பார்வையில் சுவைக்கும் வகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒருபாடலை எடுத்துக்கொண்டு அதில் உள்ள நயங்களை எல்லாம் விளக்கிக் கட்டுரை எழுதும் வகைமையை உருவாக்கியவர் அல்லது…

1 Comment

என் ஆசிரியர் : 3

உருவம் மங்கவில்லை (தொடர்ச்சி) அவர் பங்குதாரராக இருந்த சுயநிதிப் பள்ளியில் என் அண்ணன் மகள் +2 பயின்றார். அவளைச் சேர்ப்பதற்காகச் சென்றபோதுதான் ‘அவர் என் ஆசிரியர் இல்லை’ என்று தோன்றியது. அப்பள்ளி தொடங்கிய காலத்தில் மருத்துவக் கல்வியில் சேர்வதற்குக் கிராமப்புற இடஒதுக்கீடு…

1 Comment

என் ஆசிரியர் : 2

இனிய முகம் (தொடர்ச்சி) பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுக்கான வேதியியல் ஆசிரியர் துணைத் தலைமையாசிரியராகவும் இருந்தார். அதனால் அவருக்கு நிர்வாக வேலைகள் ஏராளம். மேலும் அவர் பட்டதாரி ஆசிரியராக இருந்து முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர். +2 பாடங்களை அவரால் சரியாக…

1 Comment

என் ஆசிரியர் : 1

கடுகு சிறிது; காரம் பெரிது ஓர் ஆசிரியரின் இயல்புகளும் அவர் பாடம் சொல்லும் முறையும் பிடித்துவிட்டால் அந்தப் பாடத்திலும் பேரார்வம் தோன்றிவிடும். இளவயதில் இருந்து தமிழ்ப்பாடம் மட்டுமே எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பாடநூலில் இருக்கும் எல்லாச் செய்யுள்களையும் மனனம் செய்துவிடுவேன். குறிப்பு…

4 Comments

பாரதியாரின் ‘தொண்டு’

தொண்டு என்னும் சொல்லைத் தம் கவிதைகளில் பலமுறை பாரதியார் பயன்படுத்தியுள்ளார். உரைநடையிலும் அவர் பயன்படுத்தியிருக்கக் கூடும். கவிதை அடிகள் நினைவில் இருப்பதைப் போல உரைநடை இருப்பதில்லை. நிதானமாக அவர் உரைநடையிலும்  ‘தொண்டைத்’ தேடிப் பார்க்க வேண்டும். இப்போதைக்குக் கவிதையில் அச்சொல்லாட்சியைக் காண்போம்.…

2 Comments