தமிழ்த்தாய் வாழ்த்து உரை

  தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சினை தொடர்பாகச் சில கட்டுரைகள் எழுதிய போது அப்பாடலுக்குப் பொருள் எழுதினால் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். மனோன்மணீயத்தில் உள்ள வாழ்த்துப் பாடல் முழுமைக்கும் உரை எழுதலாம் எனத் திட்டமிட்டதில் தாமதமாகிவிட்டது. அது மிகுதியான…

1 Comment

அலகிலா விளையாட்டு

  கம்பராமாயணத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் எனக்குப் பள்ளியில் மனப்பாடச் செய்யுளாக இருந்தது. அப்போது அதன் முக்கியத்துவம், பொருட்சிறப்பு என எதையும் அறியாமல் வெறுமனே மனனம் செய்திருந்தேன். எத்தனையோ மனப்பாடச் செய்யுள்கள் கால ஓட்டத்தில் மனதிலிருந்து கழன்றுவிடுகின்றன. இந்தச் செய்யுள் எப்படியோ…

3 Comments

நொந்தேன் நொந்தேன்

தீபாவளி முடிந்து ஊருக்குச் செல்லும் கூட்டத்தில் நானும் கொஞ்சம் அல்லாட நேர்ந்தது. கேரளம், கோழிக்கோட்டிலிருந்து கரூருக்கு ரயில் பயணம். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம். அதில் நீந்தித்தான் ஏற்கனவே பதிவு செய்த என் ரயிலையும் உரிய பெட்டியையும் அடைய முடிந்தது.…

4 Comments

தமிழ்த்தாய் வாழ்த்து: திரவிடமா, திராவிடமா?

  தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டுமோர் சர்ச்சை. ஆளுநர் கூட்டத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியையே விட்டுவிட்டுப் பாடியதும் துணை முதல்வர் கூட்டத்தில் சில ஒலிப்புப் பிழைகள் நேர்ந்ததும் ஒன்றல்ல. இப்போதைய திமுக ஆட்சியில்தான்  ‘தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிடக்…

1 Comment

காளமேகத்தின் கலைமகள்

பாடல்: (மூல வடிவம்) வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தி லரசரோ டென்னைச் சரியா சனம்வைத்த தாய். சந்தி பிரித்த வடிவம்: வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் -…

Comments Off on காளமேகத்தின் கலைமகள்

கீழடி இலக்கியங்கள்

        கீழடி என்னும் பெயர் அகழாய்வுத் தரவுகளால் தமிழின வரலாற்றில் முன்னிடம் பெற்றுவிட்டது. நேரான பொருள் கொண்ட இவ்வூர்ப் பெயரே அதன் இயல்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. நாம் கண்டடையத்தான் வெகுகாலம் ஆகியிருக்கிறது. கீழ் என்பது மண்ணுக்குக் கீழ்.…

Comments Off on கீழடி இலக்கியங்கள்

உ வே சாமிநாதையர்

‘வெள்ளத்தால் அழியாது; வெந்தணலில் வேகாது’ உ.வே.சாமிநாதையர் பணியாற்றிய கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் தாமும் பணியாற்றிய ஒப்புமையைக் கருதி முகநூல் பதிவு ஒன்றை ஆர்.சிவகுமார் எழுதியுள்ளார். அக்கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவங்களை உவேசா அங்கங்கே குறிப்புகளாகவும் சில கட்டுரைகளாகவும்…

Comments Off on உ வே சாமிநாதையர்