நொந்தேன் நொந்தேன்

தீபாவளி முடிந்து ஊருக்குச் செல்லும் கூட்டத்தில் நானும் கொஞ்சம் அல்லாட நேர்ந்தது. கேரளம், கோழிக்கோட்டிலிருந்து கரூருக்கு ரயில் பயணம். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம். அதில் நீந்தித்தான் ஏற்கனவே பதிவு செய்த என் ரயிலையும் உரிய பெட்டியையும் அடைய முடிந்தது.…

4 Comments

ஒருநாள்; மூன்று நிகழ்வுகள்

  08-10-24 அன்று ஒரே நாள் சென்னையில் மூன்று கூட்டங்களில் பங்கேற்றுப் பேச வேண்டியதாயிற்று. சிலசமயம் இப்படி நெருக்கடி நேர்ந்துவிடும். மூன்றும் கல்வி நிறுவனங்களில் நடந்தன. புதுக் கல்லூரியில் பணியாற்றும் நண்பர் முரளி அரூபன் பல்லாண்டு கால நண்பர். 1990களில் சென்னைப்…

1 Comment

தமிழ் இனிது

தாய்மொழியாக இருப்பினும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தவராக ஒருவர் இருக்க முடியாது. முன்னோர் வாழ்வின் ஏராளமான கூறுகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருப்பது மொழி. ஒருசெயல் வாழ்விலிருந்து உதிர்ந்ததும் அதற்குரிய சொற்களும் வழக்கிழக்கின்றன. புதிய செயல் உதிக்கும்போது புதிய சொற்கள் வழக்கிற்கு வருகின்றன.…

2 Comments

கருத்துரிமைப் பரிதாபங்கள்

தீபாவளி முடிந்தாலும் சில நாட்களுக்கு லட்டு இருக்கும்தானே. எனக்கும் லட்டு பற்றி எழுத இன்னொரு விஷயமும் இருக்கிறது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தியிடம் கேட்ட கேள்விக்கு ‘லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது சென்சிட்டிவ் டாபிக்காக உள்ளது.…

2 Comments

அரிசீம்பருப்பு

  திருப்பதில் லட்டுக்குப் பயன்படும் நெய் பற்றிய பிரச்சினை ஓய்ந்துவிட்டது.  தீபாவளிக்கு லட்டு சாப்பிட்டு மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் நாள் இது. இனிப்புக் கடைகளில் எல்லாம் எத்தகைய நெய்யால் லட்டு செய்கிறார்கள் என்பது பற்றி யாருக்கும் கேள்வியில்லை. ‘சுத்தமான நெய்யில் செய்தது’…

2 Comments

எவ்வளவு காலம் ஆகும்?

கடந்த வாரம் மதிய உணவுக்காக உணவகம் ஒன்றுக்குச் சென்றேன். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் என்னை நோக்கி ஒருவர் வந்தார். ‘பெருமாள்முருகன் சார் தானுங்களா?’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். நாமக்கல்லிலும் இலக்கிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்ப வேண்டும் என்பதற்காகவே…

5 Comments

மார்க் ட்வைன் வீடு

    மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதன் தலைப்புக் கட்டுரை லண்டனில் உள்ள  ஷெர்லக் ஹோம்ஸ் நினைவில்லத்தைப் பார்வையிட்ட அனுபவத்தைப் பேசுகிறது. எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயில் உருவாக்கிய கதாபாத்திரம் ஷெர்லக்…

1 Comment