தமிழில் இருந்து பிறந்ததா கன்னடம்?

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில்  நடிகர் கமலஹாசன் ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அதற்காகக் கர்நாடக அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓர் அமைப்பு அவர் முகத்தில் கரி பூச முயன்றதாகக் கூறியுள்ளது. மன்னிப்பு கேட்கவில்லை…

1 Comment

பொதுவெளியாகக் கோயில்கள் 2

ஓர் ஊரில் நான்கு சாதியினர் வசிக்கின்றனர் என்று கொள்வோம். நான்குக்கும் குடியிருப்புகள் தனித்தனியாகத் தான் இருக்கும். நிலவுடைமை கொண்ட இரண்டு ஆதிக்க சாதியினர் இருப்பினும் அவர்களுக்கும் தனித்தனிக் குடியிருப்புத்தான். ஆனால் அவை ஒன்றையொன்று ஒட்டியிருக்கும். இருவருக்கும் தனித்தனிக் கோயில்கள் தான். தத்தமது…

2 Comments

பொதுவெளியாகக் கோயில்கள் 1

விழுப்புரம், மேல்பாதி கிராமத் திரௌபதி அம்மன் கோயிலைத் தலித் மக்களும் வழிபாடு செய்யும் வகையில் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (17-04-25) சில மணிநேரம் மட்டும் திறந்துவிட்டு உடனே பூட்டியுள்ளனர். அதற்கே அங்குள்ள ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத்…

5 Comments

காணொலிக்கு இலக்கணம் இல்லையா?

காணொலி, காணொளி ஆகியவற்றில் எது சரி என்னும் விவாதத்திற்கு முடிவில்லை போல. சமீபத்தில் தமிழ் காமராசன் இதைப் பற்றி முகநூலில்  பதிவிட்டிருந்தார். தமிழ் இலக்கியம் பயின்றோர், தமிழ் இலக்கணப் பயிற்சி உடையோர் ‘காணொளி’ என்பதுதான் சரி என்கின்றனர். காமராசனுக்கும் அதுவே சரி…

1 Comment

உ.வே.சா. கொடுத்த உறுதிமொழி

பழந்தமிழ் இலக்கியத்தில் ஒருவிஷயத்தை எடுத்து விவாதிக்கும் தர்க்க முறைகள் பேசப்பட்டுள்ளன. மணிமேகலை, நீலகேசி உள்ளிட்ட சமய நூல்களில் இவற்றைக் காணலாம். எதிர்க்கருத்தை, எதிராளியைக் கேலி செய்வதும் எள்ளி நகையாடுவதும் உண்டு. தம் கருத்தை எடுத்து வைக்கும்போது பொருள் சார்ந்து தீவிரமாகப் பேசுதலைக்…

4 Comments

மலையாள மனோரமா விழா : 3 உதயநிதி ஆற்றிய  உரை

      மலையாள மனோரமா விழாவில் இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு தமிழ்நாட்டின் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஓர் அமர்வில் பங்கேற்றுப் பேசியது. மிகச் சில அரசியல்வாதிகளே இத்தகைய விழாக்களில் பங்கேற்பதைக் கண்டிருக்கிறேன். மேடைப் பேச்சாக அல்லாமல் அறிவார்ந்த உரைகளுக்கு…

1 Comment

தமிழ்த்தாய் வாழ்த்து: திரவிடமா, திராவிடமா?

  தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டுமோர் சர்ச்சை. ஆளுநர் கூட்டத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியையே விட்டுவிட்டுப் பாடியதும் துணை முதல்வர் கூட்டத்தில் சில ஒலிப்புப் பிழைகள் நேர்ந்ததும் ஒன்றல்ல. இப்போதைய திமுக ஆட்சியில்தான்  ‘தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிடக்…

1 Comment