உதயசங்கரின் சிறார் நூல்கள்

எழுத்தாளர் உதயசங்கரின் முதல் சிறுகதைத் தொகுப்பு  ‘யாவர் வீட்டிலும்’ சிறிய நூலாக 1990களில் வெளியாயிற்று. மிகச் சிறுகணத்தில் மனித மனோபாவம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை முன்வைத்து எளிமையாக எழுதிய கதைகள். அத்தொகுப்பை வாசித்ததும் பிடித்தது. அதன் பின் மறதியின் புதைசேறு, நீலக்கனவு…

0 Comments

சொற்சேர்க்கை அகராதி : கனத்த மழை, பலத்த காற்று

  தமிழ் உலகச் செம்மொழிகளில் ஒன்று என நாம் தொடை தட்டிக் கொண்டிருந்தாலும் இதை எளிதாக அணுகுவதற்கும் கற்றுக் கொள்வதற்கும்  போதுமான கருவி நூல்கள் நம்மிடம் இல்லை. ஓரளவு அகராதிகள் இருக்கின்றன. பல அகராதிகள் புதுப்பிக்கப்படவில்லை. தற்காலத் தமிழில் எத்தனை சொற்கள்…

1 Comment

ஊர்ப் பெயர்கள் : நாற்றத் துழாய் முடி

  மக்கட் பெயர்களும் ஊர்ப்பெயர்களும் பலவிதச் சுவைகளைக் கொண்டவை. பெற்றோர் சூட்டிய பெயர் பிடிக்காமல் வெறுப்போடு வாழ்நாளைக் கழிப்போர் உண்டு. சிலர் தாமாக முயன்று பெயரை மாற்றிக் கொள்வதுண்டு. தனிமனிதர் தம் பெயரை மாற்றிக்கொள்ளச் சட்டப்பூர்வ வழிமுறைகள் உள்ளன. ஊர்ப்பெயர் பிடிக்காமல்…

5 Comments

பெரியாரின் ‘சந்தை மொழி’

    திராவிட இயக்கத்தவரின் மேடைப் பேச்சு மொழியில் கவனம் செலுத்தும் யாரும் பெரியாரின் தனித்தன்மையை எளிதில் கண்டுகொள்ள முடியும். அண்ணாவின் பேச்சு அடுக்குமொழியும் அலங்காரங்களும் கொண்டது. அதையே திராவிட இயக்கப் பேச்சாளர்கள் பலரும் பின்பற்றியுள்ளனர். பெரியாரின் மொழியை யாராலும் பின்பற்ற…

0 Comments

அக்காலமும் வருமா?

  நவம்பர் 2024 காலச்சுவடு இதழில் ‘சாதிப் பெயரில் ஊர்கள்: இழிவா, வரலாறா?’ என்னும் தலைப்பில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. கல்விப் புலங்களில் ஊர்ப்பெயர் பற்றி ஆய்வுகள் பல நடந்திருக்கின்றன. அவை நடைமுறைப் பிரச்சினையோடு ஊர்ப்பெயர்களை இணைத்துப்…

3 Comments

கம்பர் கைக்கொண்ட வகையுளி

  கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பற்றி ‘அலகிலா விளையாட்டு’ என்னும் தலைப்பில் ஏற்கனவே கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் ‘கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் தம் முதல் பாடலில் சொற்களே இயல்பான சீர்களாக அமையும் விதத்தில் பாடியிருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியதுண்டு’ எனக் குறிப்பிட்டு…

0 Comments

‘பொச்சு மேல ஒரே மிதி’

  கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில் அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார். அவர் வேகமாகவும் சத்தமாகவும்…

9 Comments