வாழ்க வளமுடன்
‘வாழ்க வளமுடன்’ என்னும் தொடரை மனவளக் கலையை உருவாக்கிய வேதாத்திரி மகிரிஷி பிரபலப்படுத்தினார். மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்தோர் ‘வாழ்க வையகம்’, ‘வாழ்க வளமுடன்’ என்னும் இருதொடர்களை மந்திரம் போலச் சொல்வர். அவை மந்திரமா, என்ன பயன் தருகிறது…
‘வாழ்க வளமுடன்’ என்னும் தொடரை மனவளக் கலையை உருவாக்கிய வேதாத்திரி மகிரிஷி பிரபலப்படுத்தினார். மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்தோர் ‘வாழ்க வையகம்’, ‘வாழ்க வளமுடன்’ என்னும் இருதொடர்களை மந்திரம் போலச் சொல்வர். அவை மந்திரமா, என்ன பயன் தருகிறது…
ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகிய எல்ஐசியின் இணையதளம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழிக்கு மாறியுள்ளது. ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் ஏதோ ஒருமூலையில் இருக்கும் சுட்டியைக் கண்டுபிடித்துச் சொடுக்க வேண்டுமாம். அந்தச் சுட்டியின் பெயரும் இந்தியில்தான் இருக்கிறதாம். ‘இந்தியை யாரும் திணிக்கவில்லை’…
தமிழில் பிழையின்றி எழுதுதல் தொடர்பாக இணையத்தில் குறிப்புகள் தரும் தமிழாசிரியர் ஒருவர் ‘மனம்’ என்னும் சொல் பற்றிப் பேசியதைக் கேட்டேன். ‘மனம் + அத்து + இல் = மனத்தில்’ என்று வருவதுதான் சரி என்கிறார். ‘மனதில்’ என்பதைப்…
தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சினை தொடர்பாகச் சில கட்டுரைகள் எழுதிய போது அப்பாடலுக்குப் பொருள் எழுதினால் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். மனோன்மணீயத்தில் உள்ள வாழ்த்துப் பாடல் முழுமைக்கும் உரை எழுதலாம் எனத் திட்டமிட்டதில் தாமதமாகிவிட்டது. அது மிகுதியான…
கவிஞர் தமிழ் ஒளி (1924 – 1965) இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். அவரது நூற்றாண்டு இப்போது நிறைவு பெற்றிருக்கிறது. அதையொட்டித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டு முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை…
தமிழ் இலக்கணத்தில் ‘இடக்கரடக்கல்’ என்றொரு வழக்கு உண்டு. சிறுவயதில் எங்கள் ஊரில் ‘பீப் பேண்டுட்டு வந்து சோறு தின்னு’ என்று பிள்ளைகளின் பெற்றோர் சொல்வது இயல்பு. ‘பீப் பேளப் போறண்டா. வர்றயா?’ என்று நண்பர்களை அழைப்பதும் உண்டு. ‘வேல…
மலையாள மனோரமா விழாவில் இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு தமிழ்நாட்டின் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஓர் அமர்வில் பங்கேற்றுப் பேசியது. மிகச் சில அரசியல்வாதிகளே இத்தகைய விழாக்களில் பங்கேற்பதைக் கண்டிருக்கிறேன். மேடைப் பேச்சாக அல்லாமல் அறிவார்ந்த உரைகளுக்கு…