தூது இலக்கியம் 5

இருந்தமிழே! உயர்திணையையும் தூது அனுப்பலாம். அஃறிணையையும் தூது அனுப்பலாம். உயர்திணை என்றால் தோழி, தாய், பாணன் எனப் பல பேரை அனுப்பலாம். அதற்கு அகப்பொருள் இலக்கணத்தில் வாயில்கள் என்று பெயர். இவர்களெல்லாம் வாயில்களாகப் பயன்படுவார்கள். வாயில் என்றால் சந்து செய்வது அதாவது…

0 Comments

தூது இலக்கியம் 4

மடநாராய்! தூது என்னும் போது பிற்கால இலக்கியங்களைப் பற்றி மட்டும் பேசுவதைவிட பழைய இலக்கியங்களில் எங்கெல்லாம் தூதுப் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்றும் அவை எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கின்றன என்றும் தொகுத்துப் பார்த்தாலே  தெரியும். முத்தொள்ளாயிரம் என்று ஒரு நூல். அதை எழுதியவர்…

2 Comments

தூது இலக்கியம் 3

செங்கால் நாராய்! ஔவையார், அதியமானின் தூதுவராகத் தொண்டைமானிடம் சென்றார். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் பகை. தொண்டைமான், அதியமான் மீது படையெடுத்து வருவதற்குத் தயாராக இருக்கிறார். அதியமான், அவ்வையாரிடம் சொல்கிறார். தொண்டைமானும் அவரைப் போல ஒரு சிறு மன்னன். அவ்வையாரைத் தூதனுப்பித் தொண்டைமானிடம் நட்பாக…

2 Comments

தூது இலக்கியம் 2

சிறுவெள்ளாங் குருகே! தூது என்பதற்கான வரையறை மிகவும் எளிதானதுதான். அதை நடைமுறை வாழ்க்கையிலிருந்து சொல்ல முடியும். நமக்கு  வேண்டியவருக்கு நேரில் போய்ச் செய்தியைச் சொல்ல முடியாது. நேரில் செல்ல முடியாத சூழலில் தன் சார்பாக இன்னொருவரை அனுப்பி  ‘இந்தச் செய்தியை சொல்லிவிட்டு…

2 Comments

தூது இலக்கியம் 1

சிட்டுக்குருவி! சிட்டுக்குருவி! தூது இலக்கியம் என்பது ஏதோ பழந்தமிழ் இலக்கியம் என்று நாம் கருதிவிடக் கூடாது. அது பழமையான நீண்ட நெடிய வரலாறு உடையதாக இருந்தாலும் கூட இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து வரும் இலக்கிய வகைமை. சில இலக்கிய வகைமைகள் அவை…

0 Comments

தோழர் திருமாவளவன் உரைக் கூறுகள் 2

அறிவூட்டும் வகுப்பறை அவரது உரைகளின் மிக முக்கியமான சிறப்பம்சம் உளவியல் பார்வையை ஊடாட விடுவதுதான். சமீபத்தில் அவர் பேசிய இரண்டு உரைகளில் உளவியல் பார்வை என்னை வசீகரித்தது. இருசாதி இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலித் சாதி இளைஞர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.…

1 Comment

தோழர் திருமாவளவன் உரைக் கூறுகள் 1

தர்க்கமும் விளக்கமும் சில ஆண்டுகளாக இணையத்தில் நான் விரும்பிக் கேட்டுவரும் அரசியல் தலைவரின் உரை என்றால் அது தோழர் தொல்.திருமாவளவன் அவர்களுடையதுதான். அவரது  உரை ஒன்றைக் கேட்கத் தொடங்கினால் முழுவதும் கேட்டு முடிப்பது வழக்கம். அத்தகைய ஈர்ப்பு அதில் இருக்கும். அப்படி…

5 Comments