கள் மணக்கும் பக்கங்கள்

  2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது ஆய்வு நூல் ஒன்றுக்குக் கிடைத்திருக்கிறது. புனைவல்லாத நூலுக்கு எப்படி வழங்கலாம் என்று சில முணுமுணுப்புகள் எழுந்தன. அது இலக்கிய விமர்சன நூல் அல்ல, வரலாற்று ஆய்வு நூல் என்று சிலர் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.…

2 Comments

உதயசங்கரின் சிறார் நூல்கள்

எழுத்தாளர் உதயசங்கரின் முதல் சிறுகதைத் தொகுப்பு  ‘யாவர் வீட்டிலும்’ சிறிய நூலாக 1990களில் வெளியாயிற்று. மிகச் சிறுகணத்தில் மனித மனோபாவம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை முன்வைத்து எளிமையாக எழுதிய கதைகள். அத்தொகுப்பை வாசித்ததும் பிடித்தது. அதன் பின் மறதியின் புதைசேறு, நீலக்கனவு…

0 Comments

டி.எம்.கிருஷ்ணா : சுதந்திரம் வேண்டும்

  கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இவ்வாண்டு சங்கீத கலாநிதி விருது வழங்குவதைப் பற்றிச் சிலர் சர்ச்சைகளை எழுப்பினர். அவரது இசைத்திறன் குறித்து ஏதும் சொல்ல இயலாதவர்கள் அவர் பெரியாரைப் பற்றிப் பாடினார் என்றும் வேறு சில காரணங்களையும் சொல்லி எதிர்ப்புத்…

2 Comments

புத்தகக் காட்சியில் ஒருநாள்

உயர்கல்விக்காக 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை சென்றேன். எட்டாண்டுகள் சென்னையில் வசித்தேன். 1989 முதல் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று கொண்டேயிருக்கிறேன். அப்போதெல்லாம் எழுத்தாளர்கள் தான் காலார நடந்து கொண்டிருப்பார்கள். எந்தக் கடையில் யார் இருக்கிறார்கள் என்பது தூரத்திலிருந்தே…

1 Comment

‘காதலிப்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்’

சென்னை, அண்ணாப் பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்த அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. அரசை நம்பக் கூடாது; நீதிமன்றத்தை நம்பலாம் போல. இதற்கு ஆளுங்கட்சிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முயல்கின்றன. ஆளுங்கட்சியோ தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுப் பல சொதப்பல்களைச் செய்கிறது.…

2 Comments

பத்துப்பாட்டு உரைகள்

  சங்க இலக்கிய நூல்களை வாசிக்க நல்ல உரைநூல்களைச் சொல்லுங்கள் என்று நண்பர்கள் யாராவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தேடி வாசிக்கிறார்களோ இல்லையோ கேட்பார்கள். அவரவர் ஆர்வம், கல்வி, வாசிப்புத் திறன் ஆகியவற்றை உத்தேசித்துச் சில உரைகளைப் பரிந்துரைப்பேன். அவற்றில் சில புத்தகச்…

3 Comments

சொற்சேர்க்கை அகராதி : கனத்த மழை, பலத்த காற்று

  தமிழ் உலகச் செம்மொழிகளில் ஒன்று என நாம் தொடை தட்டிக் கொண்டிருந்தாலும் இதை எளிதாக அணுகுவதற்கும் கற்றுக் கொள்வதற்கும்  போதுமான கருவி நூல்கள் நம்மிடம் இல்லை. ஓரளவு அகராதிகள் இருக்கின்றன. பல அகராதிகள் புதுப்பிக்கப்படவில்லை. தற்காலத் தமிழில் எத்தனை சொற்கள்…

1 Comment