Read more about the article உ.வே.சா. தீட்டிய  பெருஞ்சித்திரம்
Version 1.0.0

உ.வே.சா. தீட்டிய  பெருஞ்சித்திரம்

உ.வே.சாமிநாதையர் எழுதியவை ஒவ்வொன்றும் வாசிக்குந்தோறும் வியப்பைத் தருபவை. ஏதேனும் ஒருவகையில் முன்னோடி முயற்சியாக விளங்குபவை. குருகுலக் கல்வி முறையில் கற்று நவீனக் கல்வி நிறுவனத்தில் உ.வே.சா. பணியாற்றினார். அவரது ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை முழுமையும் மரபானது. குருகுலக் கல்வி…

0 Comments

மயிலன் கதைகளின் நவீனத் தன்மை

மயிலன் ஜி சின்னப்பன் 2017 முதல் எழுதத் தொடங்கியவர். ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ (2020) நாவலும் ‘நூறு ரூபிள்கள்’ (2021),  ‘அநாமயதேயக் கதைகள்’ (2021), ‘சிருங்காரம்’ (2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. திருச்சியில் மருத்துவராகப் பணியாற்றும் இவர் மிகக் குறைந்த காலத்தில்,…

0 Comments

கள் மணக்கும் பக்கங்கள்

  2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது ஆய்வு நூல் ஒன்றுக்குக் கிடைத்திருக்கிறது. புனைவல்லாத நூலுக்கு எப்படி வழங்கலாம் என்று சில முணுமுணுப்புகள் எழுந்தன. அது இலக்கிய விமர்சன நூல் அல்ல, வரலாற்று ஆய்வு நூல் என்று சிலர் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.…

2 Comments

உதயசங்கரின் சிறார் நூல்கள்

எழுத்தாளர் உதயசங்கரின் முதல் சிறுகதைத் தொகுப்பு  ‘யாவர் வீட்டிலும்’ சிறிய நூலாக 1990களில் வெளியாயிற்று. மிகச் சிறுகணத்தில் மனித மனோபாவம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை முன்வைத்து எளிமையாக எழுதிய கதைகள். அத்தொகுப்பை வாசித்ததும் பிடித்தது. அதன் பின் மறதியின் புதைசேறு, நீலக்கனவு…

0 Comments

டி.எம்.கிருஷ்ணா : சுதந்திரம் வேண்டும்

  கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இவ்வாண்டு சங்கீத கலாநிதி விருது வழங்குவதைப் பற்றிச் சிலர் சர்ச்சைகளை எழுப்பினர். அவரது இசைத்திறன் குறித்து ஏதும் சொல்ல இயலாதவர்கள் அவர் பெரியாரைப் பற்றிப் பாடினார் என்றும் வேறு சில காரணங்களையும் சொல்லி எதிர்ப்புத்…

2 Comments

புத்தகக் காட்சியில் ஒருநாள்

உயர்கல்விக்காக 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை சென்றேன். எட்டாண்டுகள் சென்னையில் வசித்தேன். 1989 முதல் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று கொண்டேயிருக்கிறேன். அப்போதெல்லாம் எழுத்தாளர்கள் தான் காலார நடந்து கொண்டிருப்பார்கள். எந்தக் கடையில் யார் இருக்கிறார்கள் என்பது தூரத்திலிருந்தே…

1 Comment

‘காதலிப்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்’

சென்னை, அண்ணாப் பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்த அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. அரசை நம்பக் கூடாது; நீதிமன்றத்தை நம்பலாம் போல. இதற்கு ஆளுங்கட்சிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முயல்கின்றன. ஆளுங்கட்சியோ தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுப் பல சொதப்பல்களைச் செய்கிறது.…

2 Comments