மனோன்மணீயம் : ச.வையாபுரிப் பிள்ளை பதிப்பு

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றியவர். ச.வையாபுரிப்பிள்ளை சில ஆண்டுகள் திருவனந்தபுரத்தில் வழக்கறிஞராக இருந்தார். அச்சமயத்தில் பெ.சுந்தரம்பிள்ளையின் மீது ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. சுந்தரம் பிள்ளையின் குடும்பம் திருவனந்தபுரத்தில் வசித்ததையும் அறிந்திருந்தார்.  இப்பின்னணியில் ‘மனோன்மணீயம்’ செய்யுள் நாடக…

2 Comments

நாமக்கல் கவிஞர் : இன்னும் இரண்டு புத்தகங்கள்

நாமக்கல் கவிஞர் 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று பிறந்தார். இன்று 136ஆம் பிறந்த நாள். பொதுவாகக் கவிஞர் என்று அடையாளப்படுகிறார். ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ முதலிய தொடர்கள் அவர் உருவாக்கியவை. இன்று வரைக்கும் பயன்பாட்டில் உள்ளன. எனினும்  கவிதைகளை விட அவரது உரைநடை நூல்கள் முக்கியமானவை. மலைக்கள்ளன், காணாமல் போன கல்யாணப் பெண் என நாவல்கள் எழுதியிருக்கிறார். திருக்குறள் பற்றியும் கம்பராமாயணம் பற்றியும் ஆய்வு நோக்கிலும் நயம் பாராட்டும் வகையிலும் சில நல்ல நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு உரை வரைந்துள்ளார். உரை எழுதும் காலத்தில் அவர் செய்த ஆய்வுகளே திருக்குறள் பற்றிய நூல்களாக உருவாயின.

1 Comment

சுகுமாரனின் ‘உஸ்தாத்’

நவீன இலக்கியத்தின் ஒருவகைமை சார்ந்து அடையாளம் பெற்றவர் இன்னொரு வகைமையில் தீவிரமாக இயங்கினாலும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத சூழலே நிலவுகிறது. 1980களில் கவிஞராக அறிமுகமானவர் சுகுமாரன். ‘கோடைகாலக் குறிப்புகள்’ முதல் தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றது. அப்போது அவர் மேல் விழுந்த கவிநிழல் …

0 Comments

திருட்டு தவறுதானே, சகோதரி?

  கல்வித் துறை என்றால் பெரும்பாலும் மாணவர்களைப் பற்றியே பொதுத்தளத்தில் பேசுகிறோம். அவர்களை ஒழுக்கம் அற்றவர்களாகவும் எல்லாவகைத் தவறுகளையும் செய்பவர்களாகவும் சித்திரிக்கும் பொதுமனப் பிம்பம் ஒன்று அழிக்க இயலாதவாறு பரவியிருக்கிறது. காரணம் சமூகக் கருத்துருவாக்கத்தில் மாணவர் பங்கே இல்லை. கல்வி நிறுவனங்களில்…

0 Comments

பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

செப்டம்பர் 11 பாரதியார் நினைவுநாள். வாசிக்க எண்ணி வாங்கி வைத்திருக்கும் நூல்களுள் ஒன்றை இன்று வாசிக்கலாம் என்று அலமாரியில் துழாவினேன்.  ‘பாரதியும் காந்தியும்’ சட்டெனக் கைக்கு வந்தது. ஒரே மூச்சில் வாசித்துவிடத் தக்க நூல். தொகுப்பும் பதிப்பும் : ய.மணிகண்டன். இது…

Comments Off on பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

கு.ப.ராஜகோபாலன் என்னும் கரிச்சான்

    இன்று மார்கழி ஏழாம் நாள். திருப்பாவை ஏழாம் பாசுரம் இது: கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?…

Comments Off on கு.ப.ராஜகோபாலன் என்னும் கரிச்சான்

தமிழ் அறிக:

    ம.இலெ.தங்கப்பா – எம்.எல்.தங்கப்பா ஆகலாமா? மறைந்த தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களைச் சாகித்திய அகாதமி நூலாக வெளியிட்டுள்ளது. புதுவை யுகபாரதி தொகுப்பாசிரியராக உள்ள அந்நூலின் தலைப்பு ‘எம்.எல்.தங்கப்பாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள்’ என்று அமைந்திருக்கிறது. அந்நூலுக்கான மதிப்புரை நிகழ்ச்சி…

Comments Off on தமிழ் அறிக: