நானும் சபிக்கிறேன்!

சமீபத்தில் எழுத்தாளர் வண்ணநிலவன் தம் முகநூல் பதிவில்  ‘பாராளுமன்றம் என்பது தவறு. பார் என்றால் உலகம் என்று பொருள். நாட்டை ஆளும் மன்றம், நாடாளுமன்றம் என்பதே சரியானது’ (23-04-25) என்று எழுதியிருந்தார். அதன்பின் தேடிய போது வேறு சிலரும் இது தொடர்பாகச்…

3 Comments

உ. வே. சா. : நுட்பங்களின் வெளிப்பாடு

ஏப்ரல் 28 உ. வே. சாமிநாதையர் நினைவு நாள். அவரது பதிப்புகள், எழுத்துக்கள் மூலம் தமிழைக்  கற்று வருபவன் நான். என் வாசிப்பு அனுபவங்களையும் அவதானிப்புகளையும் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ந்து எழுதி வருகிறேன். உ. வே. சா. வை முன்வைத்து கடந்த…

1 Comment

கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 2

ஆனந்தவிகடன் (01-05-1938) இதழிலிருந்து கண்டெடுத்த கவிதையின் முழுவடிவம் இது: “கள்ளு போச்சு, கருப்பி இருக்கா!”  -சேலம் ஜில்லாவில் ஒரு காட்சி – கள்ளில்லாமெ கொஞ்சநாளா கெரக்கந்தாண்டா இருந்துச்சு செள்ளெப்புடிச்ச சனியன் நெனப்பு ரொம்ப நாளுப் போவல்லே! (1) வெளக்கேத்தி வூடுவந்தா புயுக்கிவேறே…

1 Comment

கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 1

தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் 27 ஏப்ரல் 1944 அன்று இறந்தார். இன்று அவரது எண்பத்தொன்றாம் நினைவு நாள். இந்நாளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். காரணம் இருக்கிறது. தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் கவிதைகளைத் தொகுத்துக்…

2 Comments

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் தரமான ஆசிரியர்கள். துறைசார் புலமை மிக்கவர்களையே நியமித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் இயல்புக்கேற்ற சுதந்திரச் சிந்தனை கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர். நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடைவெளி குறைவு. பாடம் அல்லாது மாணவர் திறனை ஊக்குவிக்கப் பல…

3 Comments

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 1

பெங்களூருக்கு உள்ளும் புறப்பகுதிகளிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் பல இருக்கின்றன. வெவ்வேறு மாநிலங்களில் இருந்து இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு மாணவர்கள் பெங்களூரு வருகின்றனர். அவற்றில் ஒன்று ‘அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.’ கிட்டத்தட்டத் தமிழ்நாட்டு எல்லையை ஒட்டியிருக்கும் இதன் வளாகம் நூற்றுப் பத்து ஏக்கர்…

3 Comments

நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 2

ஷேக்ஸ்பியர் வீடிருக்கும் அந்த வீதியே காட்சிக்கானதுதான். பல்வேறு நாடுகளில் இருந்தும் காண வரும் விதவிதமான மக்கள். உள்ளும் வெளியும் அமர்ந்து உண்பதற்கேற்ற உணவகங்கள். எல்லா விளம்பரப் பலகைகளிலும் ஷேக்ஸ்பியர். பிற வீதிகள் அதில் இணையும் சந்தியில் ஷேக்ஸ்பியரின் அழகிய சிலை நிற்கிறது.…

2 Comments